search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேராசிரியர் தற்கொலை"

    • ஷோபனா தனது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஈரோட்டில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபிரபாகரன் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள கருப்பூர் பகுதியில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்லூரியில் சிவில் துறையில் தற்காலிக உதவி பேராசிரியராக ஜெயபிரபாகரன் (வயது 34) என்பவர் பணியாற்றி வந்தார். அதே துறையில் இவரது மனைவி ஷோபனா (31) உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த தம்பதிக்கு கடந்த 2017-ம் வருடம் திருமணம் முடிந்து மகரன் (4), ரெணத் (1½) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    ஜெயபிரபாகரன் தனது பெற்றோர் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் கல்லூரி வளாகத்தில் உள்ள அரசு குடியிருப்பில் தங்கியிருந்தார்.

    இந்த நிலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று கல்லூரிக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்ததால் நேற்று முன்தினம் ஷோபனா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஈரோட்டில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றார்.

    இதனிடையே நேற்று இரவு கல்லூரி குடியிருப்பில் உள்ள வீட்டில் ஜெயபிரபாகரன் திடீரென மனைவியின் துப்பட்டாவை கழுத்தில் மாட்டி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலையில் அவரது பெற்றோர் எழுந்து பார்த்தபோது வீட்டில் தங்களது மகன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கதறி அழுதனர். உடனடியாக மகனின் உடலை கீழே இறக்கி இதுபற்றி கருப்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயபிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபிரபாகரன் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உதவி பேராசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லூரி வளாகத்தில் வசித்து வரும் பேராசிரியர்கள், அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வில்லியனூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி பேராசிரியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருபுவனை:

    ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த பங்கனபள்ளி பகுதியை சேர்ந்தவர் ரூப்குமார் (வயது 46). டாக்டரான இவர் வில்லியனூர் அருகே அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் கடந்த 5 வருடங்களாக அங்குள்ள விடுதியில் தங்கி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

    இவரது மனைவி உஷாராணி திருப்பதியில் அரசு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் ரூப்குமார் தங்கி இருந்த விடுதி அறை கதவு திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த உதவி பேராசிரியர் ஜேம்ஸ் ராஜேஷ் விடுதி உதவியாளருடன் ரூப்குமார் தங்கி இருந்த விடுதி அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு அறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் ஜன்னல் வழியாக பார்த்த போது, ரூப்குமார் மின் விசிறியில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீ சில் புகார் தெரிவித்தனர். போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் கீர்த்தி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் ஆகியோர் வழக்குபதிவு செய்து ரூப்குமார் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×